Skip to main content

காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது எதற்கு? - தமிழ் பண்பாடு



தொன்று தொட்டே பாரத மக்கள் பின்பற்றிவந்த ஓர் ஆசாரமுறை சூரிய நமஸ்காரம் உடல் மற்றும் மனது உறுதியடையவும் அமைதியடையவும் உதவும் ஆசாரமிது. இதை விதி முறைகள் படி செய்யும் போது உடல் பாகங்களில் ஆற்றலும் சக்தியும் வருகின்றது.
மேற்கத்திய நாடுகள் உட்பட உலகின் எல்லா பாகங்களிலும் இந்த ஆசார முறை பிரசித்தி பெற்றிருக்கின்றது ஜிம்னாஸ்டிக்ஸ், சன்பாத் என்ற பெயர்களில், சூரிய நமஸ்காரத்தை உட்படுத்திய உடற்பயிற்சிகள் செய்துவருகின்றனர்.


சூரியநமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகின்றது. சருமத்தில் வைட்டமின் டி ஒளிக்கதிர்களுக்கு உண்டு. கால்சியம் உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய உற்பத்தியை கட்டுப்படுத்தும் திறனும் உண்டு என்பது அறிவியல் துறைகள் அங்கீகரித்துள்ளன.


மேலும் உடலுறுப்புகள் உறுதி பெறுவதால் காச நோயணுக்களின் ஆக்கிரமிப்பையும் தடுக்கின்றது.தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வதனால் அகால வயதுமுதிர்ச்சியை ஓரளவுக்கு தடை செய்யலாம். மூட்டுகள் நல்ல லாவகமடைகின்றன தொப்பை வயிறு வருவதை கட்டுப் படுத்த இயல்கின்றது. மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் நிலைநிறுத்தவும் சூரிய நமஸ்காரம் உதவுகின்றது சூரிய நமஸ்காரம் செய்பவர்கள் ஆரம்பத்தில் அனுசரிக்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம். பரிசுத்தமான எளிய வாழ்க்கை வாழவேண்டும். அளவான உணவு அருந்த வேண்டும்.


குளிப்பது தண்ணீரிலானால் மிக நன்றாயிருக்கும். விசாலமானதும் தூய்மையானதும் காற்றோட்டமுள்ளதுமான இடத்தில் நமஸ்காரம் செய்ய வேண்டும். நமஸ்கார வேளையில் மிக அவசியமான ஆடை மட்டும் தளர்த்தியாக அணிய வேண் டும்.
தேனீர், காபி. கொக்கோ, புகையிலைமதுபானம் முதலியவை அருந்த வேண்டாம் இப்படி அனேக.விஷயங்கள் கவனித்து சூரிய நமஸ்காரம் ஆரம்பிக்க வேண்டும்

Comments

Popular posts from this blog

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

'எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்துகொள் ளலாம்.      மேலே கூறப்பட்ட பெரியவர்கள் இதைத் தெளிவாகப்புரிந்து கொண்டு கூறுவதில்லை! என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது. நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். 'நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின் பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது.      காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழு...

குத்துவிளக்கில் ஏன் எள்ளெண்ணை ஊற்றி எரிக்கின்றோம்?

குத்து விளக்கில் எள்ளெண்ணை விட்டு பற்ற வைக்க வேண்டும் எனக் கூறும் போது எந்த எண்ணையானால் என்ன, விளக்கு எரிந்தால் சரிதானே என்று பலரும் பதிலளிக்கலாம். இது முற்றிலும் தவறு. கண்டிப்பாக எள்ளெண்ணையே குத்து விளக்கில் ஊற்ற வேண்டும். சனி தேவனை துதித்து ஆசிபெறவே எள்ளெண்ணை உபயோகிப்பது. எள்ளெண்ணை சனி கிரகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகின்றது. எள்ளெண்ணை இரும்புச் சத்தடங்கியது. என்பது நம்மில் பலருக்கும் தெரியாது, நம்நாட்டில் இரும்புச் சத்து பற்றாக் குறையால் வரும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பண்டைக் காலத்தில் இதை அறிந்திருந்ததனால் விளக்கிற்கும், குளிப்பதற்க்கும், சமையலுக்கும் எள்ளெண்ணையே பயன்படுத்தி வந்தனர். இடைப் பயிராக பெரும் பகுதி எள் பயிரிடப்பட்டிருந்தது. credit: third party image reference நோயுற்று மருத்துவரிடம் செல்லும் போது, மருத்துவர்கள் இரும்பு மாத்திரைகளும், டானிக்குகளும் பரிந்துரை செய்யும் போதெல்லாம் நமக்கு எள்ளின் மேன்மை தெரியாமல் போகின்றது. எள்ளெண்ணை உபயேகித்து விளக்கு எரிக்கும் போது சுற்றுச்சூழலின் இரும்பின் பிராணசக்தி பரவியிருப்பதும் நாம் அறிவதில்லை. credit: third party ...

ஆண்கள் முருங்கை விதை அருந்தலாமா?

முருங்கை இலையிலும் முருங்கைக் காயிலும் உள்ள மருத்துவகுணங்களைக் குறித்து நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் முருங்கை விதைகளை ஆண்கள் உட்கொள்ளுவது கெடுதல் என்று ஒரு கருத்துண்டு. அதனால் பண்டைக்காலங்களில் முருங்கை சேர்ந்த உணவுப்பொருட்களை ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்க மறுத்திருந்தனர். credit: third party image reference சுயமாக விந்து வெளியாகும் நிலையை மாற்றி விந்தை நிலைநிறுத்த முருங்கைவிதையை பாலில் கலந்து குடிக்க வைக்கும் ஓர் சிகிட்சை முறை ஆயுர் வேதத்திலுண்டு. credit: third party image reference பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.