Skip to main content

குளித்து முடிந்தபின் ஈரமான திருநீர் அணிய வேண்டுமென்பது ஏன்?


திருநீர் அணிவதைப் பற்றிக்கூறும் போது சில நேரங்களில் ஈரமான விபூதி அணிய வேண்டுமென்றும், சில நேரங்களில் ஈரமில்லா திருநீர் அணியவேண்டும் என்று கூறுவது ஒன்றுக் கொன்று முரண்பாடாக உள்ளதே என்று தோன்றலாம். திருநீர் அணிந்தவர்களை கண்டால் மனதுக்குள் ளாவது இகழும் இக்காலத்தில், இந்த முரண்பாடுக்கு விளக்கம் கூறுவது மிகவும் அவசியம்.

நம் முன்னோர்கள் இதற்கு பதில் சொல்லவில்லை! என்றாலும் திருநீரின் மருத்துவகுணங்களைப் பற்றி அவர்கள் நன்கறிந்திருந்தனர். அதிகாலையில் எழுந்து கை, கால், முகம் கழுவி, திருநீர்ச்ட்டியிலிருந்து ஒரு பிடி எடுத்து நெற்றியிலும் பின் மாறிடத்தும், இரு புஜங்களிலும் சில வர்மஸ்தானங்களிலும் பாட்டனும் பாட்டியும் பூசிக்கொள்வதை சிலராவது பார்த்திருப்போம்.

மாலைப் பொழுதிலும் இவ்வாறு கை, கால் கழுவி வந்து நனைக்காமல் திருநீர் பூசுவதுண்டு. ஆனால் குளித்த பின் திருநீர் எடுத்து நனைத்து, உடலில் பூசிவ ந்தனர்.
இப்படி இரண்டு வகையான திருநீர் பூசும் முறை பார்க்கும் போது நாம் புரிந்து கொள்ள
வேண்டியது நனைக்காத திருநீருக்கு அணுக்களை அழிக்கும் சக்தியும் நனைத்த
திருநீருக்கு உடலில் மிகையாக உள்ள ஈரத்தை உறிஞ்சி அகற்றும் சக்தியும் உண்டென்பதாகும்.

இவ்வளவும் அறிந்த பின், நம் உடலில் காலையிலும் மாலையிலும் மட்டும் ஏன் அணுக்களின் பாதிப்பு உண்டாகின்றது என்பதைக் கவனிப்போம், 'இரவு ஒரு நபர்தூங்கும் போது அவர் படுக்கையில் லட்சக்கணக்கான அணுக்கள் பரவியிருக்கும் என்று விஞ்ஞானம் கூறுகின்றது, அதே போல் மாலை நேரத்தில் சுற்றுச் சூழலில் எண்ணற்ற நோயணுக்கள் உலவுகின்றன என்பது அறிவியலின் உறுதியான கண்டுபிடிப்பு. அதனால் காலையும் மாலையும் நோயணுக்களின் பாதிப்பு ஏற்படாமலிருக்க ஈரமில்லாத திரு நீரை அணிந்து
வருகின்றனர்.


குளிக்கும் நேரம் உடலின் மூட்டுகளில் ஈரம் காரணமாக நீர் கட்டு உருவாகவும் காலப்
போக்கில் அது வாயிலாக கொழுப்பு அதிகரிக்கவும் அது முட்டு வாதமாக மாறவும் வாய்ப்புண்டு. இப்படி உருவாகும் நீர்க்கட்டை தவிர்ப்பதற்காகத்தான் குளித்தஉடன் ஈரமான திரு நீர் அணிவது.
திருநீர் அணியும் போது சொல்வதற்காக ஆசாரியர்கள் மந்திரமும் விதித்திருக்கின்றனர்.
'ஓம் அக்னிரிதி பஸ்மஜலநிதி பஸ்ம
ஸ்தல மிதி பஸ்ம வ்யோமேதி பஸ்ம
சர்வம் ஹவா இதம் பஸ்மே
மன ஏதானி ச சஷீம் ஷிபஸ்ம்'.

Comments

Popular posts from this blog

படுக்கையிலிருந்து ஏன் வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்?

'எப்போதும் குறும்புத்தனமாக நடந்து கொள்ளும் குழந்தைகளை பெரியவர்கள் "இவன் இடது பக்கமாக எழுந்தானோ" என்று கூறுவதுண்டு. இதிலிருந்து இடது பக்கமாக எழுந்து வருவதில் ஏதோ தவறுதல் இருப்பதாகப் புரிந்துகொள் ளலாம்.      மேலே கூறப்பட்ட பெரியவர்கள் இதைத் தெளிவாகப்புரிந்து கொண்டு கூறுவதில்லை! என்றாலும் வலது பக்கமாகத் திரும்பி படுக்கையிலிருந்து எழ வேண்டும் என்பது மிக முக்கியமானது. நமது முனிவர்கள் நமக்கு வழங்கிய இவ்வொழுங்கு முறையை அண்மையில் மேல் நாட்டவர் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். 'நம் உடலைச் சுற்றும் இரு காந்த வளையங்கள் உள்ளன. இவையில் முதலாவதானது காலிலிருந்து தலைக்கும் தலையிலிருந்து காலுக்கும் வலம் வருகின்றது. இரண்டாவது காந்தவளையம் இடது பக்கமிருந்து முன்பாகம் வழியாக வலது பக்கத்துக்கும் வலது பக்கமிருந்து பின் பாகம் வழியாக இடதுபக்கமும் வலம் வருகின்றது.      காந்த வளையத்தின் திசைக்கேற்றவாறு உடல் அசையும் போது காந்த வளையத்தின் சுருள்கள் இறுகுகின்றன. எதிராக அசையும் போது சுருள் தொய்ந்து உடல் இயந்திரத்தின் செயல்திறனை தளர்வடையச் செய்யும். எனவே உடல் வலது பக்கம் திரும்பி எழு...

குத்துவிளக்கில் ஏன் எள்ளெண்ணை ஊற்றி எரிக்கின்றோம்?

குத்து விளக்கில் எள்ளெண்ணை விட்டு பற்ற வைக்க வேண்டும் எனக் கூறும் போது எந்த எண்ணையானால் என்ன, விளக்கு எரிந்தால் சரிதானே என்று பலரும் பதிலளிக்கலாம். இது முற்றிலும் தவறு. கண்டிப்பாக எள்ளெண்ணையே குத்து விளக்கில் ஊற்ற வேண்டும். சனி தேவனை துதித்து ஆசிபெறவே எள்ளெண்ணை உபயோகிப்பது. எள்ளெண்ணை சனி கிரகத்தின் பிரதிநிதியாகக் கருதப்படுகின்றது. எள்ளெண்ணை இரும்புச் சத்தடங்கியது. என்பது நம்மில் பலருக்கும் தெரியாது, நம்நாட்டில் இரும்புச் சத்து பற்றாக் குறையால் வரும் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. பண்டைக் காலத்தில் இதை அறிந்திருந்ததனால் விளக்கிற்கும், குளிப்பதற்க்கும், சமையலுக்கும் எள்ளெண்ணையே பயன்படுத்தி வந்தனர். இடைப் பயிராக பெரும் பகுதி எள் பயிரிடப்பட்டிருந்தது. credit: third party image reference நோயுற்று மருத்துவரிடம் செல்லும் போது, மருத்துவர்கள் இரும்பு மாத்திரைகளும், டானிக்குகளும் பரிந்துரை செய்யும் போதெல்லாம் நமக்கு எள்ளின் மேன்மை தெரியாமல் போகின்றது. எள்ளெண்ணை உபயேகித்து விளக்கு எரிக்கும் போது சுற்றுச்சூழலின் இரும்பின் பிராணசக்தி பரவியிருப்பதும் நாம் அறிவதில்லை. credit: third party ...

ஆண்கள் முருங்கை விதை அருந்தலாமா?

முருங்கை இலையிலும் முருங்கைக் காயிலும் உள்ள மருத்துவகுணங்களைக் குறித்து நாம் எல்லோரும் அறிவோம். ஆனால் முருங்கை விதைகளை ஆண்கள் உட்கொள்ளுவது கெடுதல் என்று ஒரு கருத்துண்டு. அதனால் பண்டைக்காலங்களில் முருங்கை சேர்ந்த உணவுப்பொருட்களை ஆண்களுக்கும் ஆண் குழந்தைகளுக்கும் கொடுக்க மறுத்திருந்தனர். credit: third party image reference சுயமாக விந்து வெளியாகும் நிலையை மாற்றி விந்தை நிலைநிறுத்த முருங்கைவிதையை பாலில் கலந்து குடிக்க வைக்கும் ஓர் சிகிட்சை முறை ஆயுர் வேதத்திலுண்டு. credit: third party image reference பெண்களுக்கு சத்துக் குறைவினால் ஏற்படும் தலைவலி, கால்களில் அடிக்கடி உண்டாகும் தசைப்பிடிப்பு ஆகியவை நாளடைவில் குணமாகும். விதைகளை, நெய்யில் வறுத்து பொடித்து, பாலுடன் சேர்த்து காய்ச்சிக் குடித்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிப்பதுடன், விந்துவின் கெட்டித்தன்மை அதிகமாகும், நரம்புகள் பலப்படும்.